அயோத்திதாசர் ஆதவன் விருது ஏற்புரை : நமது தமிழ்மண், ஜூலை 2025
அயோத்திதாசர் ஆதவன் விருது ஏற்புரை இந்த இனிய விழாவிற்கு வந்துள்ள பெருமக்கள் அனைவருக்கும் என் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேடையில் உள்ள பெருமக்கள், பார்வையாளர்கள் அனைவருக்கும் என் வணக்கமும் நன்றியும். ஒரு அரசியல் கட்சியானது இவ்வாறாக ஒரு ஆய்வாளனைத் தேடி விருது தருவது என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. சாதாரணமாக ஒரு தட்டச்சுச் சுருக்கெழுத்தனாகப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். பௌத்தம் என்னை இந்த அளவிற்குக் கொண்டுவந்து நிறுத்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு சிறிய பிளாஷ்பேக்! தமிழ் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர முனைவர்ப் பட்ட ஆய்வு செய்யலாம் என்று ஒரு விதியைக் கொண்டு வந்தார்கள். அப்பொழுது இந்தத் தலைப்பை நான் தேர்ந்தெடுத்தேன். எங்கிருந்து தொடங்குவது எனத் தெரியவில்லை. மூத்த பேராசிரியர் சோ. ந. கந்தசாமி சொன்னார், தம்பி யாரும் தொடாத துறையை நீ தொடுகிறாய் கவனமாக இரு. அதே செய்தியை ஐராவதேம் மகாதேவன் சொன்னார். கும்பகோணம் சேதுராமனும் அதையே சொன்னார். அப்பா, அது ரொம்ப கஷ்டம், அது உன்னால முடியாது. முடியாது முடியாது முடியாது என்று பெருமக்கள் சொன்னது எனக்குள் ஒர...